உள்நாடு

ஊடகவியலாளர் அஸ்வரின் துலங்கும் மர்மங்கள் நூல் வெளியீட்டு விழா

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.கே.எம். அஸ்வர் அவர்களின் துப்பறியும் சிறுகதைத் தொகுதியில் துலங்கும் மர்மங்கள் எனும் நுால் 27.05.2025 கொழும்பு 7 ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நிலையத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு நீதியரசர் எம்.எம்.ஏ கபூர் தலைமை வகித்தார். இவ் விழாவிற்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முலப்பர் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் ஷாபி ஷிஹாப்தீன் தொழிலதிபர் ஏ.எச்.எம் மாஹிர், விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர் நூலின் முதற் பிரதி பாணந்துறை புவாத் ஹாஜியார், விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர் இலங்கை வானொலி தென்றல் எம்.எம்மின் உதவிப் பணிப்பாளர் நாகபூசனி கருப்பையாவின் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரி எம். புவாட் , ஜாமியா நளீமியா சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் பளீல் (நளிமி) ஆகியோர்கள் நுால் விமர்சனம் செய்தார்.

இந் நிகழ்வில் மொரட்டுவை அஸ்வரின் குடும்ப உறுப்பினர்கள் வகுப்பு நண்பர்கள் ஊடகவியலாளர்கள் இலக்கிய வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர் அத்துடன் எழுத்தாளர் கௌரவித்து நண்பர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.

இந் நூலில் நாட்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை குற்றக் கதைகளை பத்திரிகைகளுக்கு அஸ்வர் எழுதி வந்துள்ளார். அவற்றில் சிலவற்றை தொகுத்து கதை வடிவில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தேசிய பத்திரிகைகளில் நாளாந்தம் நடைபெறும் குற்றச் செயல்களை செய்திகள் தேசியப் பத்திரிகைகளுக்கு எழுதி வந்துள்ளார் அவைகள் தினகரன் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் 14 சம்பவஙக்கை கொண்ட கதைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் 500 ரூபாய் விலைக்கு எம்.கே.எம். அஸ்வர், 266-5 மோதர மொரட்டுவை என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என அஸ்வர் தெரிவித்தார்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *