விளையாட்டு

தொட்டவத்தையில் மல்டிலக் அனுசரணையில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

பாணந்துறை தொட்டவத்தையில் ஹஜ் பெருநாள் சிறப்பு விளையாட்டு நிகழ்வாக “மல்டிலக்” வர்த்தக குழுமியத்தின்(MULTILAC GROUP) அனுசரணையிலான நான்காவது வருட ஹஜ் பெருநாள் கிண்ண மெகா உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி-2025 எதிர்வரும் ஜூன் மாதம் எட்டாம் மற்றும் ஒன்பதாம் திகதிகளில் பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டி தொடர்பான சீட்டிலுப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி அணிக்கு ஏழு பேர் கொண்ட சுற்றுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

போட்டியில் சம்பியன், ரன் அப் அணிகளுக்கும் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த கோல் காப்பாளர் ஆகியோருக்கு கிண்ணங்களுடன் விஷேட பணப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக போட்டித் தொடரின் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஏ.எச்,எம்.ரிகாஸ் தெரிவித்தார்.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு 359,000, இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 200,000, மூன்றாம் இடம் பெறும் அணிக்கு 100,000, நான்காம் இடம் பெறும் அணிக்கு 50,000, சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் சிறந்த கோல் காப்பாளருக்கு தலா 25,000 ரூபாவும் பணப் பரிசில்களாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                 (எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *