WHO வில் பலஸ்தீனுக்கு அங்கீகாரம்
உலக சுகாதார அமைப்பில் – WHO அங்கத்துவம் பெற்று தேசிய கொடியை பறக்க விடும் உரிமையை பெற்றது பாலஸ்தீனம்.
நேற்று திங்களன்று நடைபெற்ற ஜெனீவாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சவுதி அரேபியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு 95 நாடுகளின் ஆதரவு வாக்குகளுடன் அங்கீகரிக்கப்பட்டது.
இஸ்ரேல், ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் இதை எதிர்த்து வாக்களித்த அதே வேலை, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட இருபத்தேழு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்க்கவில்லை. நேற்று முதல் பாலஸ்தீனியர்கள் WHO இல் அதிகாரப்பூர்வமாக பார்வையாளர் அரசு அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.