ஹஜ்ஜுக்குச் செல்லும் மூன்று ஊடகவியலாளர்களுக்கான துஆ பிரார்த்தனை
இம்முறை ஹஜ் யாத்திரிகை செல்லும் மூன்று ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் துஆப் பிரார்த்தனை செய்து வழியனுப்பியது.
துஆப் பிராத்தனையை ஊடகவியலாளர் முஸ்தபா மௌலவி நிகழ்த்தினார்.இந் நிகழ்வு மீடியா போரத்தின் மாதாந்த செயற்குழு கூட்டம் நேற்று 26 .05.2025 மருதானை அல் சபா மண்டபத்தில் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.
ஊடகவியலாளர்கள் – றிப்தி அலியும் அவரது துணைவியார். பாஹிம் சம்ஸ் அவரது துணைவியார் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவையின் ரலீன் ஆகியோர்கள் இம்முறை ஹஜ் பயணம் ஆகின்றனர்.
(அஷ்ரப் ஏ சமத்)