உள்நாடு

திருமலையின் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவருமான சண்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த கூட்டத்தின் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்

திருகோணமலை மாநகரசபை, பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர், குச்சவெளி தம்பலகாமம் ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க கட்சிகளுக்கிடையிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த சபைகளில் தவிசாளர் பதவிகளை இரு கட்சிகளும் புரிந்துணர்வின் அடிப்படையில் வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *