மஹிந்தானந்தவுக்கு பிணை
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உர இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.