உள்நாடு

அதாஉல்லா மு.காவின் முதலமைச்சர் வேட்பாளரா?; மறுக்கிறார் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர்

திகாமடுல்ல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் முஷாரப் ஆகியோருடன் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே.

இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் மற்றும் பொதுவான விடயங்களுமே பேசப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.

மேலும் முஸ்லிம் கட்சிகளுக்கிடையேயும் முக்கியஸ்தர்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பிலுமே பேசப்பட்டது.

ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்வைக் களம் இறக்குவது குறித்தோ அதற்கு எமது கட்சி இணக்கம் தெரிவித்தமை தொடர்பிலோ இந்தச் சந்திப்பில் எதுவுமே பேசப்படவில்லை என்றும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *