உள்நாடு

LTTE இடமிருந்து தெய்வாதீனமாகஉயிர் தப்பிய பலாங்கொடைபரிபாலன சபை தலைவர் அல்ஹாஜ் ஏ.எல் .நஜிமுதீனின் திகில் அனுபவம்

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

தமிழ் சகோதரர் ஒருவர்
உணவும் பாதுகாப்பும்
தந்து உறங்க வைத்தார்.
நெற்றியில் பொட்டு வைத்து திருநீறு பூசி என்னை தமிழ் கிராமத்துக்கு அழைத்து சென்று பின்
என்னை பள்ளிவாசலில் ஒப்படைத்தார்.

இரத்தக் கறையுடன் காட்டில்
பாய்ந்து விடியும் வரை
புதருக்குள் மறைந்திருந்தேன். ஜனாதிபதி பிரேமதாச
எங்களை சரணடையுமாறு
உத்தரவிட்டிருந்தார். கருணா எங்களை கொல்ல
உத்தரவு வழங்கியிருந்தார்.
பசும் பாலுடன் இரவுச்
சாப்பாடும் கிடைத்தது.

நான் இறந்து விட்டதாக பொலீஸ் அறிவித்ததால் வீடு திரும்பிய
என்னை வீட்டார் அச்சமடைந்து வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

பொலீஸ் சேவையில் இருந்த அநேகமான தமிழ் அதிகாரிகள் LTTE ஆல்
கொலை செய்யப்பட்டனர்.

1990 இல் LTTE இனால் அக்கரைப்பற்று பொலீஸ் நிலையத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு திருக்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட 79/78 பேரில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஒருவரான பலாங்கொடையை சேர்ந்த
சார்ஜன்ட் அப்துல் லத்தீப் நஜிமுதீன் அவர்கள் புலனாய்வு ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன்
நடத்திய நேர்காணல் விபரம் வருமாறு
இவர் தற்போது ஒரு பிரபலமான இரத்தினக்கல் வர்த்தகர் எமது பலாங்கொடை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவராக
கடமையாற்றுகிறார்
ஒரு சிறந்த சமூகப் பணியாளராக
கல்வி சமூகப் பணிகளுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.

அன்று 1990 ஜூலை 11 ஆம் திகதி அக்கறைப்பற்று பொலீஸ்
நிலையம் LTTE ஆல் சுற்றி வளைக்கப் பட்டது 78 பொலீஸ் உத்தியோகத்தர்கள் கடத்தி செல்லப்பட்டு திருக்கோவில்
நெசவு நிலையம் ஒன்றில்
கைகள் (பின்னால்) கண்கள் கட்டப்பட்டு நிலத்தில் படுக்க வைக்கப்பட்டு
துப்பாக்கிகளால் நாம்
சுடப்பட்டோம் தெய்வாதீனமாக என் மீது துப்பாக்கி சூடுபடவில்லை

சூடு நடத்தப்பட்ட பின் அவர்கள் ஒவ் வொருவராக யாராவது உயிருடன் இருக்கிறார்களா என பரீட்சிப்பதற்காக எங்களின் உடம்புகளில் ஏறினர்
என் உடம்பிலும் நடந்தனர் நான் மிகவும் பொறுமையாக வலியை
தாங்கினேன் பக்கத்தில்
இருந்த தடித்த பொலீஸ் அதிகாரியின் தோல் பட்டையில் தலை வைத்து
இறந்தது போல நடித்தேன் என் முகத்திலும் உடம்பிலும்அடுத்தவர்களின்
உடல் சிதறிய இரத்தம் ஓடியது

அனைவரும் இறந்து விட்டார்கள்
என உறுதிப்படுத்திக் கொண்ட அவர்கள்
ஒரு கிரனைட் ஒன்றையும் எம்மீது வீசினார்கள் அதில்
ஒரு துண்டு என் நெற்றியில் பட்டது

எமது பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் அதிகாரியின்
சகோதரர் ஒருவர் LTTE இல் பொறுப்பாளராக இருந்தார்
இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற உள்ளதாக எமது OIC இற்கு அவரே
தகவல் வழங்கி இருந்தார் எனவே
OIC சம்பவம் இடம் பெறும் போது பொலீஸ் நிலையத்தில் இருக்கவில்லை

நாம் சுற்றி வளைக்கப்பட்டுள்ள விடயத்தை பொலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த போது
யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேசிக் கொண்டு இருப்பதால் எங்களுக்கு சரணடையுமாறு உத்தரவிடப்பட்டது

பொலீஸ் நிலையத்திலிருந்த
தமிழ் அதிகாரிகள் கொல்லப்
படவில்லை அவர்கள் வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டது

முன்னாள் இராணுவ தளபதி டென்சில்
கொப்பேகடுவவிடமும் நான் பணியாற்றி இருக்கிறேன் ஆனால் உயிர்த்தப்பி வந்த எனக்கு பதவி உயர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை
என்பது வேதனையாக இருக்கிறது
ஒரு இலட்சம் ரூபா அன்பளிப்பு
பணம் மட்டும் கிடைத்தது அதன் பின் சேவையிலிருந்து நான் விலகினேன்

இந்தளவு பாதிக்கப்பட்ட நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள் பணம் வேண்டுமா பதவி உயர்வு வேண்டுமா அதனை அரசாங்கத்துக்கும் அதிகாரிகளுக்கும் கூறுங்கள் என ஊடகவியலாளர்
சமுதித கேட்ட போது எனக்கு எதுவும்
வேண்டாம் என்னோடு பாதிக்கப்பட்ட
அனைவருக்கும் நீதி நியாயத்தைப் பெற்று கொடுக்குமாறு வேண்டுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *