உலகம்

சிரியா மீதான பொருளாதாரத் தடையை நீக்கிய அமெரிக்கா

சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குவதில் அமெரிக்கா முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தபடி அமெரிக்கா தனது பொருளாதார தடைகளை நீக்குவதற்கான முதல் நடவடிக்கையை நேற்று முன்தினம் (23) எடுத்துள்ளது.

சிரியாவின் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது.

அத்தோடு சிரியாவுடன் வர்த்தக உறவு வைக்க நட்பு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாகவும் அமெரிக்க வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

இந்த தடை நீக்கம் அடுத்த 6 மாதத்திற்கு அமுலில் இருக்கும். இதன் மூலம் சிரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய உறவு தொடங்குவதற்கான முதல் படி எடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறையமைச்சர் மார்கோரூபியோ கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *