கண்டி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் இரு நூல்களின் அறிமுக விழா
கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா
கண்டித் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்;டில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பெருமாள் சரவணகுமார் பதிப்பில் உருவான தேசபக்தன் கோ. நடேசையரின் ஒற்றன் மற்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தம் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கண்டி யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள டெவோன் ஹோட்டலில் இடம்பெற்றது.
பேராசிரியர் துரை. மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்டித் தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. எஸ். பரமேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இரு நூல்கள் வெளியீட்டுரையினை பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களும். இந்தியா – இலங்கை ஒப்பந்தம் பற்றிய நூலின் அறிமுகவுரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி அவர்களும் மற்றும் ஒற்றன் நாவல் பற்றிய நூலின் அறிமுகவுரையினை திரு. கோ. கணபதிப்பிள்ளை அவர்களும் நிகழ்த்தினார்கள்
நூல்களின் ஆய்வுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொருளியல்துறை, சிரேஷ்ட விரிவுரையாளர் (மேனாள்) பேராசான் மு. நித்தியானந்தன் அவர்களும்
மற்றும் ஏற்புரையும் நன்றியுரையினையும் பேராதனைப் பல்கலைக்கழகம். தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர், நூல்களின் பதிப்பாசிரியர், கலாநிதி பெருமாள் சரவணகுமார் அவர்களும் நிகழ்த்தினார்கள்.






(இக்பால் அலி)