ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்குத் தெரிவாகிய தொட்டவத்தை நஸ்ரின் லுப்றி
பாணந்துறை தொட்டவத்தையொச் சேர்ந்த கணித ஆசிரியர் சனாஸ் நஸ்ரின் லுப்றி இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு (SLTES) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான ,போட்டிப் பரீட்சை-2018/2020 மற்றும் 2023, 2024 ஆண்டுகளில் இடம்பெற்ற நேர்முகப் பரீடசை மற்றும் பிரயோக பரீட்சை பெறுபேறுகளின் தெரிவின் அடிப்படையில் இந்த நியமனத்துக்கு இவர் தெரிவாகியுள்ளார்.
இலங்கை?திறந்த பல்கலைக்கழக விஞ்ஞான இளமாணி (கணிதத்துறை) பட்டதாரியான இவர் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி முதுமாணிப் பட்டமும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் கணிதம் கற்பித்தல் துறையில் மெரிட் நிலை (merit) தேசிய டிப்ளோமா பட்டமும் பெற்றவராவார்.
பணந்துறை அல்பஹ்றியா தேசிய பாடசாலை கணித ஆசிரியராக கடமையாற்றும் இவர் பாணந்துறை தொட்டவத்தையைச் சேர்ந்த மர்ஹும்களான ஏ.ஏ.எம்.மகீன்,சித்தி மஹ்பியா தமாபதிகளின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)