உள்நாடு

குரிவெல ஹமீதியா காணிப் பிரச்சினை; நியாயம் கோரி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட உக்குவளை குரிவெல ஹமீதியா கல்லூரி அதன் அருகே அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச சிங்கள பாட சாலைகளுக்கிடையிலான காணியமைவின் எல்லை பிரச்சினை விவகாரத்தைத் தீர்த்து 

 கல்லூரிக்கு நியாயம் பெற்றுக்கொள்ளும்வகையில் உக்குவளை குரிவெல ஹமீதியா கல்லூரி பழைய மாணவர் சங்கம்  கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது

இதுகுறித்து இக்கல்லூரி அபிவிருத்திச்சங்க செயலாளர் எம்.ஏ.எம்.சலீம் தெரிவிக்கையில்,

மாத்தளை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றமடைந்துவரும் நிலையில் உலக வங்கி   கல்வியமைச்சினூடாக  எமக்கு வழங்கிய ஒன்றரைகோடி ரூபா நிதியைக்கொண்டு பத்து வகுப்பறைகளைக்கொண்ட இரண்டுமாடி கட்டிடமொன்றுக்கு இக்கல்லூரி காணியில் அத்திவாரம் இடப்பட்டது  இதன்போது அருகிலமைந்த சிங்கள பாடசாலை நிர்வாகம்  அதற்கு ஆட்சேபனை தெரிவித்து மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது இதனையடுத்து எமது கல்லூரி நிர்வாகம் எமது கல்லூரிக்குரிய காணி அமைவின் எல்லையுட்படட் சகல உறுதிசெய்யப்பட்ட  ஆதாரங்களை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து நியாயம் கோரியும் பயன்கிட்டவில்லை

இந்நிலைமைகாரணமாக குறிப்பிட்ட கட்டட அத்திவாரப் பணி நிறுத்தப்பட்ட நிலையில்  கல்வியமைச்சு வழங்கிய நிதியும் அமைச்சினால்  திருப்பிப் பெறப்பட்டது

இதனையடுத்து இவ்விவகாரம் கண்டி , மாத்தளை கல்வியதிகாரிகள்  குறிப்பிட்ட அமைச்சர்கள்  முன்னாள் முதலமைச்சர்கள் , ஆகியோரது  கவனத்துக்குக் கொண்டுவந்தும் அவர்களும் நீண்டகாலமாக எமக்குத் தீர்வைப் பெற்றுத்தராது   இதுவிடயத்தில்  பக்கச்சார்பாகவே செயற்பட்டதை அறியமுடிந்தது 

எனவே இவ்வாரான நிலைமையில் எமது கல்லூரி காணி விவகாரத்தில் நியாயம்பெறவேண்டி இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது  என்றார்.

(ஜலீல் நஜீஹா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *