குடாகம விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் காயம்
மன்னம்பிட்டிய அரலகங்வில வீதியில் குடாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மன்னம்பிட்டிய அரலகங்வில வீதியில் குடாகம பகுதியில் இராணுவ வீரர்கள் பயணித்த டிபெண்டர் வாகனம் வீதியை விட்டு விலகிச் சென்று மரத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மகா ஓயா பகுதியில் பயிற்சி நடவடிக்கைக்கு சென்று விட்டு மீண்டும் மின்னேரிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிபெண்டர் வாகனத்தைச் செலுத்திய இராணுவ சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மன்னம்பிட்டிய பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)