உள்நாடு

இந்த ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்; பாராளுமன்றில் பிரதமர் அறிவிப்பு

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 01 முதல் 05 வரையிலான வகுப்புகளுக்கும், 06 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப் பிரதமர் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

தரம் 01 முதல் தரம் 05 வரை சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 4,240 ஆகவும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2,827 ஆகவும் உள்ளது.

தரம் 06 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 11,274 ஆகவும் தமிழ் மொழியில் 06 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 6,121 ஆகவும் காணப்படுகிறது.

மேல் மாகாணத்தில் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி அரசப் பாடசாலைகளில் தரம் 01 முதல் 05 வரையிலும், தரம் 06 முதல் 11 வரையிலும் பின்வரும் எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 1318 தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 1325 தமிழ் மொழிமூல வெற்றிடங்களின் எண்ணிக்கை – 397

கொழும்பு கல்வி வலயத்தில் சிங்கள மொழிமூலம் தரம் 1 முதல் தரம் 5 வரையிலான ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 84 ஆக காணப்படுவதுடன்
தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 85 ஆக உள்ளது.

தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 226 ஆகவும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 140 ஆகவும் காணப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *