இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் கெஹெலிய ரம்புக்வெல்ல
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த மூன்று வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (20) சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.