அரசியல் கள நிலவரம் குறித்து தாருஸ்ஸலாமில் கலந்துரையாடல்
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலை மையப்படுத்தி வன்னி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு, ஆட்சி அமைப்பில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போதைய அரசியல் கள நிலைவரம் ஆகியவை தொடர்பில் மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் அடங்கலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (18) கலந்துரையாடினர்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.எஸ்.எம்.அஸ்லம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாத் நிஸாம்தீன், ஷாபி ரஹீம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





