யுத்த நிறுத்தத்தை அடுத்து வான் வெளியைத் திறந்தது பாகிஸ்தான்
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதையடுத்து பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியது. இதனால் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உட்பட அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்ததோடு மே 12 ஆம்திகதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மீண்டும் வான்வெளியை திறந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது.