தீவிர பிரசாரப்பணியில் ஹிஸ்புல்லாஹ்; குருநாகலில் அமோக வரவேற்பு
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இவ்விஜயத்தின் போது, குருநாகல் மாவட்ட மக்களால் பாராளுமன்ற உறுப்பினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


