உள்நாடு

தேசிய மக்கள் சக்தி அரசின் கொழும்பு மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் குழுவின் தலைவர் லக்ஷ்மன் நிபுனாரச்சி எம்.பி,தலைமையில் இடம்பெற்றது..!

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாரச்சி தலைமையில் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

    கொழும்பு மாவட்டத்தின் முன்னோக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இக்கூட்டத்தில் நீண்ட நேரம் நேரம் கலந்துரையாடப் பட்டதுடன் திட்டங்களின் பிரதிபலன்கள் மக்களுக்கு முறையாக சென்றடைவது  தொடர்பில் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும்  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  

      கொழும்பு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களான பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பிரதி சபாநாயகர் ரிஸ்வி ஸாலி பாராளுமன்ற உறுப்பினர்களான கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசிங்க, சுசன்த தொடவத்த,  சந்தன சூரியாரச்சி, தேவானந்த சுரவீர, அருண பனாகொட , மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளர் தம்மிகா விஜேசிங்க, மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக குமார மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *