எம்.அஷ்ரப்கான் சிறப்பதிதியாக கலந்து கொண்ட 106 ஆவது வகவக் கவியரங்கு..!
வலம்புரி கவிதா வட்டத்தின் 106 ஆவது கவியரங்கு இம்மாதம் 14 ஆம் திகதி காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது. மறைந்த கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம் நினைவரங்கில் நடைபெற்ற கவியரங்கிற்கு கலாபூஷணம் கவிஞர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் தலைமைத் தாங்கினார்.
வகவ ஸ்தாபக உறுப்பினர் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனி முன்னிலை வகித்தார். முஸ்லிம் சேவையின் நாடக உலக ஜாம்பவான் எம். அஷ்ரப்கான் சிறப்பதிதியாக நிகழ்வில் கலந்து கொண்டு வகவ நிகழ்வுகளை கௌரவப்படுத்தினார்.
வலம்புரி கவிதா வட்டத் தலைவர் என் நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். வரவேற்புரையை செயலாளர் இளைநெஞ்சன் முர்ஷிதீனும் நன்றியுரையை பொருளாளர் ஈழகணேஷும் வழங்கினர். அத்துடன் மறைந்த கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம் பற்றிய நினைவுகளை இருவரும் சிறப்பாகப் பதிவு செய்தனர்.
அண்மையில் நம்மை விட்டும் பிரிந்த கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம், கவிஞர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன், கவிஞர் மௌலவி காத்தான்குடி பௌஸ், மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் அவர்களின் தாயார், மறைந்த கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் தாயார் ஆகியோருக்கான மௌனப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
106 ஆவது கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்திய கவிஞர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ்ஸை வரவேற்று கவிஞர் பர்ஹத் சித்தீக் கவிதை பாடினார்.
கவியரங்கில் கவிஞர்கள் ஆர். தங்கமணி, இறைஞானக் கவி ரமீஸ், மஸீதா அன்ஸார், எம்.ஆர்.எப். சிபாயா, வாசுகி வாசு, கிண்ணியா அமீர் அலி, அருந்தவம் அருணா, அப்துல்லாஹ் ஷியாமிர், கலேவெல அமீன், ராஜன் நஸிருத்தீன், தாமரைச் செல்வி, சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், எம். எஸ். அப்துல் லதீப், மலாய்கவி டிவாங்ஸோ, பதுளை கபிலகன் ஒகஸ்டீன், தமிழ்த் தென்றல் அலி அக்பர், தி. ஸ்ரீதரன், எச். பாத்திமா நிஹ்லா, ராஜா நித்திலன். வாழைத்தோட்டம் எம்.வஸீர், சிந்தனைப் பிரியன் முஸம்மில், தெஹியோவிற்ற இரா. சிவராசா, அருந்தவம் அருணா, ஆர். எஸ். ரஸ்மியா ஆகியோர் கவிதை பாடினர்.
எம்.எஸ்.எம். ஜின்னா, அஸீஸ் லக்ஹானா, எம்.ஐ.எஸ். ஹமீத், கலைநிலா சாதிகீன், எஸ்.எச்.எம். இத்ரீஸ், கம்மல்துறை இக்பால், கவிநேசன் நவாஸ், எம்.ஜே.எம். ஜப்ரான், எம்.பீ.எம். சித்தீக், எம். எப். பஸ்மி, எம்.ஐ.எப். ருக்ஷானா போன்றோர் சபையை அலங்கரித்தனர்.






