அனுராதபுரம் புனித நகர் சுற்றிவளைப்பில் 43 பேர் கைது
அனுராதபுரம் புனித நகரை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நான்கு மணித்தியால விஷேட சுற்றிவளைப்பில் (14 ஆம் திகதி) பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
அனுராதபுரம் வருபவர்களுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த 05 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர், 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இருவர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்பட 43 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனுராதபுரம் தேவனாம்பியதிஸ்ஸபுர ,பண்டுலகம , சாலியபுர , குருந்தங்குளம் ,விஜேபுர சாலியபுர மற்றும் நெலும்குளம் ஆகிய இடங்களில் வசிப்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவா புத்திரனவின் பணிப்புரையின் பேரில் அனுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த குணசேகர உள்ளிட்ட 34 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த விஷேட சுற்றிவளைப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் (15) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம்)