உள்நாடு

பொலிஸ் காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்..!

தலாவ  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வரப்பட்ட போது காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தலாவ பொலிசார் தெரிவித்தனர்.

தலாவ கம்பிரிகஸ்வெவ பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 12 ஆம் திகதி வீடொன்றை உடைத்து சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் தலாவ  பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர்   (14 ஆம் திகதி) தலாவ  பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபரை பொலிஸ் நிலைய சிறையில் வைத்திருந்த போது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சந்தேக நபரின் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று மீண்டும் பொலிஸ் சிறை அறைக்கு அழைத்துச் செல்லும் போது பொலிஸ் சார்ஜனை தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *