சபாநாயகர் அசோக ரன்வல ராஜினாமா..!
கலாநிதிப் பட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கலாநிதிப் பட்டம் தொடர்பாக பொய்யான தகவல்களை நான் வழங்கவில்லை அது தொடர்பான ஆவணங்கள் என் கைவசம் இல்லாததால் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் அரசாங்கத்தையும் நாட்டு மக்களையும் அசெளகரியத்துக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை.எனவே தான் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

