மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு நுளம்பு வலை வழங்கி வைக்கப்பட்டது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர் பாமினி அச்சுதன் தலைமையில் மலேரியா அபாயம் உள்ள நாடுகளுக்கு சென்றுவந்தவர்களுக்கு மலேரியா நோய் ஏற்படாவண்ணம் தடுக்கும் முகமாக மருந்தூட்டபட்ட நுளம்பு வலை வினியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது சுகாதார வெளிகள உத்தியோகத்தர் எஸ்.மனிமாறன் மற்றும் இவ் விடயத்துக்கு பொறுப்பான திருமதி.கேசவநந்தினி சதானந்த குமார் ஆகியோர் பங்கேற்றனர்.





எஸ்.எம்.எம்.முர்ஷித்.
