உள்நாடு

தரங்கவிற்கு எதிரான பிடியாணை இடைநிறுத்தம்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் முன்னர் பிறப்பித்திருந்த பிடியாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக தற்போது கடமையாற்றும் தரங்கஇ ஆட்ட நிர்ணய வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்துஇ கடந்த வாரம் மாத்தளை மேல் நீதிமன்றம் இந்த பிடியாணையை பிறப்பித்தது. கண்டியில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பாக தரங்காவே மேற்கொண்ட விசாரணையில் இருந்து இந்த வழக்கு உருவாகியுள்ளது.

தரங்கா தற்போது அமெரிக்காவில் உரிமையியல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டுள்ளதால்இ அவரால் விசாரணையில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கமை மாத்தளை மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது உத்தரவில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *