உள்நாடு

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் சார்ஜன்ட் கைது

அனுராதபுரம் 12 கடைப் பகுதியில் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரம் பிராந்திய புலநாய்வுப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மற்றுமொருவரும் மத்திய வன்முறை எதிர்ப்பு பிரச்சாரப் பிரிவின் வலான ஊழல் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கைது செய்துள்ளனர்.

கவரக்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பிராந்திய புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் ஒருவரும் வன்னியன் குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சார்ஜன்ட் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக வலான ஊழல் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

(எம்.ரீ. ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *