உள்நாடு

அ.இ.ம.கா வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவுடன் கரம் கோர்த்த மருதமுனை எம்.ஜீ.சமூக சேவை அமைப்பினர்

மருதமுனை எம். ஜீ. சமூக அமைப்பின் தலைவர் கனிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்று நேற்று (15) செவ்வாய்க்கிழமை ப்ளூ சீ வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரூம் பாராளுமன்ற வேட்பாளர் இலக்கம் 8 இல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களும் இலக்கம் 1இல் போட்டியிடும் வேட்பாளர் சமட் ஹமீட் அவர்களும் மற்றும் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களுக்கு முழு ஆதரவை வழங்குவோம் என இதன் போது வருகை தந்திருந்த சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகோபித்து தமது ஆதரவை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *