உள்நாடு

அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழு இன்று சந்திப்பு

பொதுத் தேர்தலுக்கான செலவு ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று (15) கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து கட்சிகள் வேட்பாளர்களுக்காக செலவு செய்யவேண்டிய அதிகபட்சத் தொகை அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இன்று ஊடக பிரதானிகளுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதுடன், நாளை (16) அமைச்சுகளின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளின் பிரதானிகளுடன் முக்கிய பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *