உள்நாடு

உக்குவளை பிரதேச செயலக அரங்கில் சாகித்ய கலை விழா..!

“மனித நேயத்தை வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளிலான 2024 ன் சாகித்ய கலை விழா உக்குவளை பிரதேச செயலக அரங்கில் (11) நடைபெற்றது

உக்குவளை பிதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் இப்பிரதேச செயலாளர் தென்னகோன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதேச செயலக கலாசார பிரிவின் கலைத்துறைசார் அதிகாரிகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் சர்வமத குருமார்கள் மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வில்  சிங்கள,  தமிழ் , மத கலாசார நிகழ்ச்சிகள் மேடையேற்றப் பட்டதுடன் நிகழ்வின் இறுதியில் கலாசார நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்கள் கலைஞர்களுக்கு  பிரமுகர்கள் சான்றுகளை வழங்கிவைத்தனர்
( உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *