உள்நாடு

குளியாப்பிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வும் ,மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும்.!

குருணாகல் மாவட்டம்,குளியாப்பிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வும் ,மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் ,கல்லூரி அதிபர் எம். ஆர். எம். ரிப்கான் அவர்களின் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக ஜே. எம். மீடியா நிறுவனத்தின் தலைவர் சட்டமாணி ராஷிட் மல்ஹர்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அவர் அங்கு மாணவர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி பாடசாலை ஊடகப் பிரிவை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான அறிவுரைகளை வழங்கியதோடு,தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஊடகத்தின் முக்கியத்துவம் பற்றி அறிவித்ததோடு,பாடசாலை காலங்களில் கல்விப் பணியோடு சேர்த்து இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவது வளமான எதிர் காலத்துக்கு வழிவகுக்கும் எனவும்,தீய செயற்பாடுகளுக்கு மாணவர்கள் செல்வதிலிருந்து தடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
(மாவனல்லை செய்தியாளர் பாரா தாஹீர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *