உள்நாடு

கல்முனையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரதேமதாச அவர்களுக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட  பிரசாரக் கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகம் திறப்பு..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்பின்பேரில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் கெளரவ சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம்  மற்றும் தேர்தல் அலுவலக திறப்பு விழா என்பன முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான கெளரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் (10) அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது கட்சியின் தவிசாளர், பிரதித் தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் ஆதரவாளர்கள்  என பலர் கலந்து சிறப்பித்தனர்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *