உள்நாடு

எல்பிடிய பிரதேச சபைத் தேர்தல்; வேட்பு மனுக்களுக்கான இறுதி நாள் இன்று

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதும் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் இதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதுடன், 10 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *