உள்நாடு

சஜித்துக்கே ஆதரவு. முடிவில் மாற்றமில்லை. சுமந்திரன் உறுதி.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்படும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஸ்ரீதரன் ஆகியோருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தனது‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்தார்.

“இது எங்கள் கட்சி சரியான முறையில் எடுத்த முடிவு. இப்போது அதை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே எதிர்கால வேலைகள் குறித்து சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் கலந்துரையாட வேண்டும் என அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த வாரம், அதன் மத்திய குழு கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம், மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததை அடுத்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *