உள்நாடு

கொழும்பு உம்மு ஸாவியாவில் சமாயிலுத் திர்மிதி பாராயண தமாம் மஜ்லிஸ்..!

ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122வது வருட புனித ‘சமாயிலுத் திர்மிதி பராயண மஜ்லிஸ்’ தமாம் வைபவம் எதிர்வரும் 16ம் திகதி(16-9-2024) திங்கள் கிழமை காலை நடைபெறும் .

இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவதரித்த புனித ரபியுல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் இம் மஜ்லிஸ் வருடாந்தம் நடைபெறுகிறது.

உம்மு ஸாவியா பிரதம இமாம் அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரி முதல்வர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.எஸ். அஹ்மத் சூபி (மஹ்ழரி) தலைமையில் கடந்த 5ஆம் திகதி பராயண மாஜிலிஸ் ஆரம்பமாகி தினமும் நடைபெற்று வருகிறது.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை ஹதீஸ் பராயண தமாம் நிகழ்சிகளை மு.ப.7:30 மணி முதல் 8:00 மணி வரை நேரடியாக அஞ்சல் செய்யும்.

கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அஹமத் சூபி (மஹ்ழரி) ஹதீஸ் விளக்கவுரை நிகழ்துவார்.

உம்மு ஸாவியா நிர்வாக சபை தலைவர் தேசபந்து அல்-ஹாஜ் மக்கி ஹாஷிம் தலைமயிலான நிர்வாக சபையின் வழிகாட்டலின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுதுள்ளது.

நிர்வாக சபையின் சமய விவகார குழு தலைவர் முன்னாள் பலஸ்தீன் தூதுவர் அல்-ஹாஜ் பெளஸான் அன்வர் உட்பட நிர்வாகிகள், உலமாக்கள்,கலீபாக்கள்,முகத்தமீன்கள்,முன்சிதீன்கள்,இஹ்வான்கள் நிகழ்வில் பங்குபற்றுவர்.

 

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *