உள்நாடு

தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய ஜேவிபி க்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் ; நாமலும் சஜித்தோடு கைகோர்க்க வேண்டும் – தம்மரத்ன தேரர்

“தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய ஜேவிபி க்கு மக்களும், பௌத்த மக்களும் வாக்களிக்க மாட்டார்கள்” என, மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவா ஹெங்குணு வெவே தம்மரத்ன தேரர் குறிப்பிட்டார்.

குருநாகல் மாவத்தகம பிரதேசத்தில் (09) இடம்பெற்ற சஜித் பிரேமதாஸவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே தேரர் இதனைக் குறிப்பிட்டார்.
“பௌத்த மக்களின் புண்ணியஸ்தலமாக உலகமே போற்றும் தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு மிலேச்சத்தனமான கொள்கையுடைய ஜே வி பி க்கு நாட்டை நேசிக்கு பௌத்த மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” எனவும் தம்மரத்ன தேரர் குறிப்பிட்டார்.

“அனைத்து இன மக்களையும் ஒரு தாய் பிள்ளைபோல் நடத்தக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸ ஆவார். எனவே, இத்தகு அருமையான சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்‌ஷவும் சஜித்தோடு கைகோர்க்க வேண்டும் எனவும் தம்மரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *