ஜனாதிபதித் தேர்தல்; இன்று முதல் மூடப்படும் இரண்டு பாடசாலைகள்
ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகள், முன் கூட்டியே மூடப்படவுள்ளதாக, மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் விபுலானந்த மகா வித்தியாலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் இந்து வித்தியாலயமும், இன்று (11) முதல் மூடப்படும்.” என, மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.ஜி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், “வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள ஏனைய பாடசாலைகளும் எதிர்வரும் 20 ஆம் திகதி மூடப்படும்” எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், “அனைத்துப் பாடசாலைகளும் 23 ஆம் திகதி வழக்கம் போல் திறக்கப்படும்” என்றும், “இதேவேளை, வாக்கு எண்ணும் மையங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இரண்டு பாடசாலைகளும், 24 ஆம் திகதி திறக்கப்படும்” என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )