இன்றும், நாளையும் தபால் வாக்களிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு இன்றும், (11) நாளையும் (12) தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக அரச அதிகாரிகளுக்கு கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.