உள்நாடு

அகில இலங்கை கலாச்சாரப் போட்டியில் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மாணவிக்கு முதலிடம்..!

அகில இலங்கை  ரீதியாக கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட ,பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சார “நஷீத்” போட்டியில் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி மாணவி எம்.எம். எம். ஜமீலா தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று தனக்குரிய சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் . இவர் வலய மட்டத்திலும்,மாவட்ட, மாகாண மட்டங்களிலும் போட்டியிட்டு முதலிடங்களைப் பெற்றதோடு,தேசிய மட்டத்திலும் முதலிடத்தைப் பெற்று,கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரை பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,நலன் விரும்பிகள் என அனைவரும் பாராட்டுகின்றனர்.
(மாவனல்லை செய்தியாளர் பாரா தாஹீர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *