உள்நாடு

தேசிய கஸீதா போட்டியில் பெருகமலை ஸாக்கரீன் மாணவிகள் முதலிடம்

*பேருவளை சீனன்கோட்டை பெருகமலை ஸாக்கரீன் குர்ஆன் மத்ரஸா மாணவிகளான ரஹ்மா இஹ்ஸான்,ஹுஸைனா நவ்மான், ஸம்ஹா மர்யம் முனாஸ் ஆகியோர் கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகிடையிலான முஸ்லிம் கலாச்சார போட்டியில் கஸிதா போட்டி பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.

சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் தேசிய மகளிர் கல்லூரி சார்பில் இந்த மூவரும் கோட்ட மட்ட , வலய மட்ட , மாகாண மட்ட போட்டிகளிலும் பங்குபற்றி முதலாம் இடத்தை பெற்று மேற்படி குர் ஆன் மதராசாவுக்கும் பாடசாலைக்கும் புகழ் சேர்த்து உள்ளதாக குர்ஆன் மதராசா அதிபர் மெளலவி எஸ் எச் எம் இம்ரான் (ஹுமைதி) தெரிவித்தார்.

கசிதா போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களும் மதராசா சிவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் பாராட்டி கௌரவிக்க பட உள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

 

(பேருவளை பி எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *