உள்நாடு

சிவில் சமுக அமைப்பு ஏற்பாடு செய்த சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையால்..!

சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையால் ஒன்றினை சிவில் சமுக அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த சனிக்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள மெண்டரீனா கோட்டலில் இடம் பெற்ற கலந்துரையாடலில் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் புத்தி ஜீவிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்டவர்கள் ஜனாதிபதியிடம் கேட்ட வினாக்களுக்கு விடையளித்து அதற்கான விளக்கங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசி, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *