உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கைது

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக (10) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பிற்கு எதிராகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிர்மாணிப்பதற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர், சம்பவ இடத்திற்கு வந்து, “தேர்தல் காலங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமில்லை” எனவும், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கலைந்து செல்லலாம்” என்றும் கூறியிருந்தார்.

இருப்பினும், போராட்டக்காரர்கள் நடை பேரணிக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​​ஏற்பாட்டாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், போராட்டத்தை பொலிஸார் கலைக்க நடவடிக்கை எடுத்த போது, ​​மற்றொரு கும்பல் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *