உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட  அமைப்பாளர்களின் ஒன்றுகூடல்..!

ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை ஆராயும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பிரதேசங்களின் வட்டார அமைப்பாரகளின் ஒன்றுகூடல் அக்கட்சியின் பிரமுகர் எஸ் எம் சபீஸ் அவர்களின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று எம்.எஸ். லங்கா வளாகத்தில்  (08) இடம்பெற்றது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், மாவட்ட குழு தலைவருமான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.ஏ. அப்துல் ரஸாக் (ஜவாத் )தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஐ. மாஹிர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், அம்பாறை மாவட்ட வட்டாரங்களின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தல் காரியாலயங்களை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான  பொதுக் கூட்டங்கள், வட்டார ரீதியான பிரச்சாரக் கூட்டங்கள், வட்டார ரீதியாக வீடு வீடாக சென்று பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற தீர்மானங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *