உள்நாடு

ஐந்து நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் – பொதுச் சேவைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை

“அரச அதிகாரிகள் ஐந்து நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு முதல் ஐந்து நாட்களுக்குள் சேவையை விட்டும் வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என, பொதுச் சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
.
“அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால், சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆவது கண்காணிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவைகள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *