உள்நாடு

இன்னும் தீர்மானிக்கவில்லை – சந்திரிக்கா

“மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தனது வாக்குரிமையைப் பயன்படுத்துவதாகவும் ஆனால், ‘எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்’ என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட எவருக்கும் முக்கிய பொறுப்பும் கடமையும் உண்டு.
அனைத்து வேட்பாளர்களும் அழகான கொள்கை அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அதை எப்படி செயல்படுத்துவார்கள் என்று காத்திருக்கிறேன்.

இந்த முன் மொழிவுகளை, திருடர்கள் குழுவுடன் செயல்படுத்த முடியாது. மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.
இப்படிப்பட்டவர்களை வைத்து எப்படி அரசு நடத்துவது என்பது எனக்குப் புரியவில்லை.
எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கும் போது, எவருக்கும் வேலை செய்யவோ அல்லது தனது ஆதரவை வழங்கவோ இல்லை, நடுநிலையாக இருக்க முடிவு செய்துள்ளேன்.

தேர்தலின் பின்னர் பொதுமக்கள் அமைதியான ‘அரகலய’ ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் ஜனநாயக முறைமையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை அமுல்படுத்துதல் மற்றும் கல்வித்துறை போன்றவற்றில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *