உள்நாடு

குவைத் பல்கலைக்கழக மாணவர்களால் நீர்கொழும்பில் நிகழ்ச்சி..!

கடந்த சனிக்கிழமையன்று  (31.08.2024) குவைத்தை மையமாக் கொண்டு இயங்கக்கூடிய இலங்கை மாணவர்கள் ஒன்றியம் “இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்”  எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு, பலகத்துறை அல்-பலாஹ் கல்லூரியில் தலைமைத்துவ மற்றும் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வொன்றினை நடாத்தியது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக Dr. ரிஷாட் புஹாரி மற்றும் அஷ்-ஷெய்க் எம்.டீ .எம். நுஸ்ரத் (நளீமி) கலந்துகொண்டதுடன், கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் எம்.யூ. பாயிஸ் (நளீமி), பாடசாலையின் பிரதி அதிபர்கள் எம்.எம்.எம். சதீஸ்கான், ஷஹாமா மொஹமட், உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.  தரம் 11, 12, 13 ஆகிய மாணவர்களுக்கான இம் முழுநாள் நிகழ்வில் பகல் போசனம் மற்றும் மாலை நேர தேநீர் உபசாரம் போன்றவையும் வழங்கப்பட்டது.
(அனஸ் அப்பாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *