உள்நாடு

களுத்துறையின் 8 தொகுதிகளையும் வெற்றி கொள்ள 90 வீதமான முஸ்லிம்கள் வாக்களிப்பர்; ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் இப்திகார் ஜெமீல்

ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான விஷேட கூட்டமொன்று (07-09-2024) பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைப்பாளர் இப்திகார் ஜமீல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் களுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் பங்கு பற்றினர்.

முன்னாள் எம்.பி அஸ்லம் ஹாஜியார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம அம்ஜாத், முன்னாள் உப நகராதிபதி ஹஸன் பாஸி, முன்னாள் பிரதேச சபை தலைவர் பதி ஹாஜியார், பாணந்துறை பிரதேச சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தாஹிர் பாஸி, ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டாக்டர். ரூமி ஹாஷிம் உட்பட பலரும் இங்கு உரையாற்றினர்.

ஸஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் அணி திரண்டுள்ளதாகவும் மாவட்டத்தின் 8 தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி கொள்வதற்காகவும் 90% வீதமான முஸ்லிம்கள் ஸஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக வாக்களிக்கவுள்ளதாவும் இப்திகார் ஜமீல் இங்கு பேசும் போது கூறினார்.


(பேருவளை பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *