உள்நாடு

விஸ்கி கலந்த ஐஸ்கிரீமிற்கு கடும் கிராக்கி

விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் வாய் ஊரினாலும் உங்களால் இதனை சாப்பிட முடியாது ஏனெனில் விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் இவை இவற்றை விற்பனை செய்த பல சந்தேக நபர்களை போதை வஸ்த்து தடுப்பு பிரிவினரும் பொலீசாரும் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இதன் விளம்பரம் வைரல் ஆக்கியதை அடுத்து இதன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதில் விஸ்கி கலக்கப் பட்டுள்ளமை தெரிய
வந்ததை அடுத்து இதனோடு தொடர்புபட்ட மேலும் பலரையும் பொலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இந்த ஐஸ்கிரீம் வகை விற்கப்படும் இடத்தை முற்றுகையிட்ட போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(ஏ.ஏ.எம். பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *