உள்நாடு

“நாட்டைக் கட்டியெழுப்புவோம்” ஜனாதிபதி தேர்தல் விவாதம்

முழு நாடுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்,”நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற முறையைக் கூறுகின்ற ஐனாதிபதி வேட்பாளர்களுக்கான விவாதம், இன்று சனிக்கிழமை (07) முதல் 09 ஆம் திகதி திங்கட்கிழமை வரை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

முதலாம் நாள் விவாதம், இன்று (07) மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரைக்கும், தேசிய தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி, சிரச, தெரண, ஹிரு, மற்றும் சியத்த ஆகிய தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

இவ்வாறே, இரண்டாம், மூன்றாம் நாள் விவாதங்களும், 8 ஆம் 9 ஆம் திகதிகளில், குறித்த நேரத்திலேயே நேரலையாக ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, முழுமையான விவாதம் தொடர்ச்சியாக மூன்று நாட்களிலும் நடைபெறவுள்ள நிலையில், ‘தேசிய தொலைக்காட்சி’ மற்றும் “March 12 Movement” இன் “Facebook” மற்றும் ‘YouTube’ தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *