உள்நாடு

தென் இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர் மெளலவி ஹைதர் அலி (மிஸ்பாஹி) இலங்கை விஜயம்

தென் இந்திய மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞரும் பேச்சாளருமான மெளலவி அல்-ஹாஜ் அல் உஸ்தாத் ஹைதர் அலி (மிஸ்பாஹி) 12 நாள் விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்துள்ளார்.

பேருவளை சீனங்கோட்டையில் தங்கி நிற்கும் இவர் நாட்டில் பல பகுதிகளிலும் நடைபெறும் மீலாத் விழா நிகழ்வுகளில் உரையாற்றவுள்ளார்.

06-09-2024 இரவு சீனங்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் நடைபெறும் மீலாத் ஸுப்ஹான மெளலித் மஜ்லிஸிலும் இவர் உரையாற்றினார்.

சீனங்கோட்டை பிட்டவளை ஸாவியாவில் நடைபெறும் 92 வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி பாராயண மஜ்லிஸ் நிகழ்விலும் மெளலவி ஹைதர் அலி (மிஸ்பாஹி) உரையாற்றவுள்ளார்.


(பேருவளை பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *