உள்நாடு

அரசியலில் பெற்றுக் கொள்ள எனக்கு எதுவும் இல்லை; நம்பிக் கெட்டோம்; நாம் உதவியவர்கள் எம்மை கை விட்டுச் சென்றனர் – திலித் ஜயவீர

நான் என்றும் அரசியலுக்கு வரவோ, தேர்தல் போட்டியிடவோ நினைத்தவன் அல்ல நான், ஒரு தொழில் முயற்சியாளன் நாட்டுக்கு வரி செலுத்துபவன் அரசியலால் எனக்கு பெற வேண்டியது எதுவும் இல்லை நாட்டை கரை சேர்ப்பார்கள் என்று நாம் நம்பி உதவி செய்தவர்கள் எம்மை கைவிட்டு சென்று விட்டனர். என சர்வஜன பல கட்சியின் தலைவர் திலித் ஜயவீர நேற்று பலாங்கொடையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தருகையில் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் நான் அரசியலில் நுழைகிறேன். உபாய மார்க்கத்துக்கு உட்பட்ட நிரந்தர நிலைத்து நிற்கும் திட்டங்களுடன் இந்த நாடு அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் திட்டங்களும் செயற் பாடுகளும் நீண்ட காலம் நிலைத்து தொடராக செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(ஏ.ஏ.எம். பாயிஸ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *